
நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தற்போது தட்டுப்பாடு இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக பல்வேறு பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றது.
தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார்.