
கொழும்பு, மார்ச் 15
நாட்டின் கடன்நெருக்கடி, அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சினைகளை கையாண்ட விதம் காரணமாக அரசாங்கம் தனது நியாயபூர்வ தன்மையை இழந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா சிஎன்பிசிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக தனது கட்சி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறப்போகின்றன நாங்கள் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம் இந்த அரசாங்கம் தனது நியாயபூர்வதன்மையை இழந்துவிட்டது என்பதே எனது கருத்து.
கடந்த மூன்று மாதங்களாக நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை நிதி நெருக்கடி குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஜனநாய நாடொன்றில் நாடாளுமன்றத்திலேயே இவ்வாறான விவாதங்கள் இடம்பெறவேண்டும்.
அரசாங்கம் மிகவும் பொறுப்புணவற்ற விதத்தில் இந்த நெருக்கடியை கையாள்கின்றது. நாட்டின் கடன் தொடர்ந்தும் தாங்ககூடிய நிலையில் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைய உள்நாட்டு நெருக்கடிகள் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்திய கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
முதலாவது தேவையற்ற வரிச்சலுகை இரண்டாவது நள்ளிரவில் உரங்கள் மீது விதிக்கப்பட்ட தடை இது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 இல் அரசாங்கம் அறிவித்த வரிச்சலுகைகள்.
இதன் காரணமாக பெருந்தொற்று காலத்தில் வரிவருமானங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்தன என்றார்.