த.தே. கூட்டமைப்புடன் இடம் பெற இருந்த ஜனாதிபதியின் சந்திப்பு திடீர் இரத்து
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நடைபெற இருந்த சந்திப்பு இன்று மூன்றாவது தடவையும் இரத்து செய்யப்பட்டதோடு எதிர்வரும் 25ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசுக்கு எதிரான பேரணி நடைபெற இருப்பதாலும் வாகன நெரிசல் மற்றும் சந்திப்பின்போது ஏதேனும் இடையூறுகள், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி செயலகம் இன்றைய கூட்டத்தினை இரத்து செய்ததாக அறியமுடிகின்றது.