கிராஞ்சி கிராம மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்க டக்ளஸ் முயற்சி

கிளிநொச்சி, மார்ச் 15: கிளிநொச்சி, கிராஞ்சி கிராமத்தில் வாழ்ந்துவருகின்ற கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தினை உருவாக்கும் வகையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்தில் கடலட்டை பண்ணை அமைத்தல் உட்பட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பிரதேச மக்களுடன் கலந்துரைடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராஞ்சி கிராமத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *