மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய, மருந்து வகைகளின் விலைத்திருத்தம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *