சிங்கப்பூரில் இலங்கையரின் துணிகரச் செயல் – விருது வழங்கி கௌரவிப்பு!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர், நெடுஞ்சாலைகளில் வாளைப் பயன்படுத்தி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் நபரை அடக்கியதற்காக சிங்கப்பூர் பொலிஸாரின் விருதை வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் 35 வயதான அமில சிந்தன என்ற இலங்கையரே இந்த விருதைப் பெற்றுள்ளார்.

அமில சிந்தன சிங்கப்பூரில் விநியோக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

சாமுராய் வாள் ஏந்திய நபர் ஒருவர் வீதியில் நடந்து சென்ற இலங்கையரான அமில சிந்தனையையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல்களின் விளைவாக சிந்தனவுக்கு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தன்னை சுதாகரித்துக் கொண்ட சிந்தன அந்த நபரை தரையில் வீழ்த்தி கட்டுப்படுத்தினார்.

அன்றாட வாழ்வில், பொது நலனுக்காக அயராது உழைக்கும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் பொலிஸ் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.

37 வயதான சிங்கப்பூர் ஆடவரான குயனடை லுழரளளநக கையில் வாளுடன் தெருவில் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் நடந்து சென்றுள்ளார்.

அவர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு போதைப்பொருட்களை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அமில சிந்தனயை கத்தியால் குத்துவதற்கு முன்பு பல வாகனங்களை சேதப்படுத்தியும் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *