“போரை நிறுத்துங்கள்”: ரஷ்ய அரசின் செய்தி தொலைக்காட்சிக்குள் திடீரென நுழைந்த பெண்

மாஸ்கோ, மார்ச் 16

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 20-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது திடீரென ” போரை நிறுத்துங்கள் என்ற முழக்கத்தோடு கையில் பதாகையை ஏந்தி கொண்டு பெண் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .அதில்,”போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் ” என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *