உக்ரைனில் போரில் 97 குழந்தைகள் உயிரிழப்பு: ஜெலன்ஸ்கி

கீவ், மார்ச் 16

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *