எரிபொருளை பதுக்கும் முயற்சி – நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

இலங்கை மக்களுக்கு எரிசக்தி அமைச்சின் செயலாளர் அவசர அறிவுறுத்தலொன்று விடுத்துள்ளார்.

அதனடிப்படையில் டீசல் பயன்படுத்தும் மக்கள் தொடர்ந்தும் தேவையில்லாமல் டீசலை சேமிக்கும் பட்சத்தில் டீசல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை காரணமாக டீசல் இறக்குமதியில் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் உள்ள போதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பொதுமக்களின் இந்த செயற்பாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும்.

ஆகவே மக்கள் தேவையில்லாமல் டீசலை பதுக்கி வைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பொது மக்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *