இந்துகாதேவிக்கு ‘வாகை மங்கை’ சிறப்பு கௌரவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு ‘வாகை மங்கை’ எனும் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளார்கள்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தினால் நேற்று நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தில் அவருக்கு இக் கௌரவம் வழங்கப்பட்டது.

‘பெண் சமத்துவம் காணும் உலகை வெற்றிகொள்வோம்’ எனும் தொனிப்பொருளில் துணுக்காய வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் மாலதி முகுந்தன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அலுவலக பெண் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

தடைகளை தாண்டிய சாதனைப் பெண்ணிவள், தரணியில் இன்னும் பல சாதனை படைத்திட துணுக்காய் கல்வி வலயத்தினால் ‘வாகை மங்கை’ எனும் சிறப்பு கௌரவத்தினை கணேஸ் இந்துகாதேவிக்கு வழங்கி கௌரவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *