
தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம் நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பழைய கட்டணங்களில் தொடருந்து சேவையை வழங்குவது கடினம்.
தொடருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக இன்று புதன்கிழமை குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.