70 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி: மூவருக்கு நேர்ந்த கதி

டயகம வெஸ்ட் தோட்டத்திற்கு சொந்தமான லொறியொன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை எரிபொருள் நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு, அதிகாலை ஒரு மணிக்கு குறித்த தோட்டத்திற்கு செல்லும்போது, ஆகுரோவா பிரதேசத்தில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, லொறியின் சாரதி உட்பட மூவர் பலத்த காயங்களுடன் டயகம பிரதேச வைத்தியசாலையசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணமென, ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *