கற்பிட்டி படகு சேவை இறங்குதுறையை புனரமைக்குமாறு கோரிக்கை!

கற்பிட்டி – துறையடியிலுள்ள படகு சேவை இறங்குதுறை சேதமடைந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

துறையடியிலிருந்து முகத்துவாரம் வரை மிக நீண்ட காலமாக இயந்திர படகு சேவை இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மக்கள் இயந்திர படகில் ஏறுவதற்காக பயன்படுத்தப்படும் பைபர் தயாரிப்பிலான இறங்குதுறை உடைத்த நிலையில் காணப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என நாளாந்தம் பலர் முகத்துவாரத்திலிருந்து இறங்குதுறைக்கும், இறங்குதுறையிலிருந்து முகத்துவாரத்திற்கும் பயணம் செய்வதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் கற்பிட்டி துறையடியிலுள்ள இறங்குதுறை பழுதடைந்துள்ளதால், இயந்திர படகு சேவை ஊடாக போக்குவரத்து செய்வதற்காக வரும் மக்கள் விபத்துக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும், குறித்த படகு சேவை இறங்குதுறை இன்னமும் புனரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *