பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவை – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்துக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவையை முன்னெடுக்கவுள்ளது.

இந்த சேவையில் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை ஈடுபடுத்தவுள்ளதுடன், இந்த விமானங்கள் வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் மு.ப 12.35 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படவுள்ளன.

இவ்விமானம் மறுநாள் காலை 7.30 மணிக்கு பெரிஸை சென்றடையும் என்றும் மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *