பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையர் என்பதில் கவலையடைவதாக அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

நியூசிலாந்தில் இடம்பெற்ற குரூரமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இந்த தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்த தாக்குதலால் நியூசிலாந்து அரசாங்கதிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கவலையில் இலங்கை அரசாங்கம் பங்கெடுப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

சர்வதேச ரீதியாக மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *