ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மட்டு. வில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு – மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மரணங்களும் பதிவாகியுள்ளன என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், நாளொன்றுக்கு 300 என்ற கணக்கில் அடையாளப்படுத்தப்பட்டு வந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக 200 என்ற கணக்கில் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் 7 ஆயிரத்து 959 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதேநேரம், கடந்த வாரம் ஆயிரத்து 414 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 34 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 248 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *