கடந்த ஒருவாரத்தில் இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த நூற்றுக்கணக்கான கோடிகள்!

கடந்த மாதம் 28 ஆம் திகதியில் இருந்து இம்மாதம் 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கை சுங்கத்துறை இறக்குமதி வரி வருவாயை ரூ. 9.4 பில்லியனாகப் பெற்றுள்ளது.

மேலும் இந்தக் காலத்தில் சுங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு ரூ. 46.4.4 பில்லியன் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு சுங்கத்துறை சுங்கத் துணை இயக்குநர் சுதத்த சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய கொரோனா விரிவாக்கம் இருந்தபோதிலும், சுங்கச்சாவடிகளின் கடமைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் சுங்கத் துறை கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *