டயர் வெடித்ததால் வீதியில் சிதறிய வர்த்தக பழங்கள்..!

வர்த்தக பழங்களை விற்பனைக்காக எடுத்துச்சென்ற லொறியின் டயர் வெடித்ததில் வாகனம் விபத்திற்குள்ளான நிலையில் மீட்கப்பட்டது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த இருவரும் அதிஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி வர்த்தக பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறியே இவ்வாறு விபத்தில் சிக்கியது.

அத்தோடு குறித்த வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தமையினால் வாகனம் விபத்திற்கு உள்ளானதுடன் அதில் இருந்த வர்த்தக பழங்கள் வீதியில் சிதறி காணப்பட்டன.

மேலும் இவ் விபத்து சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை போக்குவரத்து பொலிஸார் பிரதேச மக்களின் உதவியுடன் விபத்திற்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தினை சீர் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *