மகாராஷ்டிராவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக மும்பை மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மேயர் கிஷோரி பெட்னேகர், பண்டிகைகளை மக்கள் வீடுகளில் இருந்தே கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 28 விழுக்காடு தொற்று பாதிப்பு செப்டம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அரசியல், மதம் சார்ந்த பொதுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *