இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரித்தன.

மேலும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி மேற்கண்ட மூன்று நாடுகளிலும் கொரோனா நிலை 4 ஆக உயர்வடைந்துள்ளதால், அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம் நெதர்லாந்து, மால்டா, கினி-பிசாவு குடியரசு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளை நிலை 4 இலிருந்து நிலை 3 ஆக குறைத்துள்ளது.

மேலும் இது தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கும்.

அத்தோடு அவுஸ்திரேலியா நிலை 1 இலிருந்து நிலை 2 க்கு உயர்ந்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *