இளைஞர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில், கடந்த 5ம் திகதி இரவு 8 மணியளவில் இரு இளைஞர்கள் மீது வவுணதீவு காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தெரிகையில்,

குறித்த இரு இளைஞர்கள் அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே துப்பாக்கியால் சராமாரியா காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளாதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *