ஒற்றுமைபற்றி கருத்துரைக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள் ஒற்றுமையின்றி செயற்படுகின்றனர் – பிள்ளையான்

ஒற்றுமைபற்றி கருத்துரைத்துவிட்டு தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதே போலித் தமிழ் தேசியவாதிகளின் செயற்பாடு என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களிற்கு நிவாரண விலையில் சதோச ஊடாக அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சத்தோச விற்பனை நிலையம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, கள்ளியங்காடு உணவுக் களஞ்சியசாலையில் இந்த சத்தோச விற்பனை நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஐ.நா. சபைக்கு நான்கு பகுதிகளில் இருந்து கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினை திருப்திப்படுத்தும் வகையில் கடிதத்தினை எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *