2, 000 ரூபா கொடுப்பனவு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு..!

அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வருமானத்தை இழந்தவர்களுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 02 ஆயிரம் ரூபாய் மானியக் கொடுப்பனவு பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அதனை பெறுவதற்காக மேன்முறையீடு செய்ய முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கலாம் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கொடுப்பனவுக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 46 ஆயிரத்தி 581 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் குறைந்த வருமானமுடைய வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள் ,சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள் ஆகியோர் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *