பிளாஸ்டிக் சார்ந்த மேலும் 7 உற்பத்திகளுக்கு தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்த கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த 5 உற்பத்திகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
அத்தோடு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் மூலம் தயாரிக்கப்படும் லன்ச் சீட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
எனினும் இந்தநிலையில் பிளாஸ்டிக்கினால் உற்பத்தி செய்யப்படும் குளிர்பான குவளைகள், இடியப்ப தட்டு, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் மலர் மாலைகள் உள்ளிட்ட 7 வித பொருட்கள் அவற்றில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.