இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த !!

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டார்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தும் முகமாக குறித்த விஜயம் அமைந்துள்ளது.

மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது வத்திக்கான் பாப்பரசரை சந்திப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்தது.

பாப்பரசரை சந்திப்பது குறித்து பிரதமர் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அத்துடன் வத்திக்கானில் இருந்து அதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *