மதுபோதையில் அடித்த கணவரை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!

கணவனின் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலை செய்யப்பட்டவரின் மனைவி நெலுவ பொலிசார் குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நபரின் மார்பில் கத்தியால் குத்திக் கொல்லப்பபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட அவரது மனைவி நெலுவ லேல்வள ஜம்புகஸ்வில பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.

32 வயதான கணவர் குடித்துவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இது கொலை என்பது தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கொலைசெய்யபட்டவரின் மனைவி அளித்த வாக்குமூலங்கலுக்கு அமைய , இந்த சம்பவம் குறித்து பொலிசார் விரிவான விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.

இந்த விரிவான விசாரணையின் போது மனைவி கணவனை கத்தியால் மார்பில் குத்தியது கொலை செய்தமை தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை (10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *