யாழில் கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த (50 வயது) பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த (63 வயது) ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த (73 வயது) ஆண் ஒருவரும் அரியாலையைச் சேர்ந்த (81 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த (91 வயது) பெண் ஒருவர், வீட்டில் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *