நுவரெலியா- மஸ்கெலியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு

நுவரெலியா- மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

ஹற்றன்- கொட்டகலை ரொட்டரக்ட் கழகம் மற்றும் அல்முனை மொரட்டுவ பல்கலைகழக ரொட்ட ரக்ட்கழகம் அனுசரணையில், இந்த கண்காணிப்பு பிரிவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு பிரிவு, மஸ்கெலியா வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஆர்.எம் பாஹிமா தலைமையில் இன்று  திறந்து வைக்கப்பட்டது.

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில், பல மில்லியன் ரூபாய் செலவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200 பேர், தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கமும் கொடைவள்ளர்களும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

மேலும், குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *