இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை- முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாங்கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில், ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 30வயதிற்கு மேற்பட்டோருக்கு இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 10.09.2021 இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந் நிலையில் பெருந்திரளான மக்கள் இரண்டாங்கட்டத் தடுப்பூசியை ஆர்வத்துடன் ஏற்றிக்கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் குறித்த இரண்டாங்கட்ட சைனோபோர்ம் தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாட்டை, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார
பணிமனை, இராணுவம் மற்றும், இராணுவ வைத்தியர்கள் இணைந்து முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *