வவுனியாவில் நேற்றும் அறுவர் கொரோனாவிற்கு பலி..!

வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை அறுவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.

மேலும் குறித்த நபர்களில் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா தொற்று விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்

இதேவேளை சுகவீனம் காரணமாக அவர்களது வீடுகளில் நேற்றுமுன்தினம் மரணமடைந்திருந்த 5 பேருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் அதன் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் அவர்களிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *