வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் ..!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதனை இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *