நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகிறார் அஜித் நிவாட் கப்ரால்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு, அமைச்சரவை அமைச்சரின் அதிகாரம் கிடைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகின்றமையினால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, தெரிவு செய்யப்பட இருக்கின்றவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *