பாரதியாரின் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் நன்றி தெரிவிப்பு

பாரதியாரின் நினைவு நாள், மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்புக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  “சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் திகதி, சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம் வருடந்தோறும் செப்டம்பர் 11ஆம் திகதி, மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நாம் வரவேற்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *