யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு..!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாம் ஆண்டு மாணவி அவரது வீட்டில் இருந்து இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தை சேர்ந்த சாருகா என்ற மாணவியே வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய மரணத்துக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.
குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்
குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கடந்த வருடங்களாக மருத்து துறையில் கல்வி பயிலும் மாணவர்களின் இறப்புகள் பதிவாகின்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *