ஊரடங்கை நீடிப்பதால் பயனில்லை : உபுல் ரோஹண

“இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாகச் செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை.” என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவது மிகப் பலவீனமான மட்டத்தில் இருக்கின்றது. இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை முறையாகச் செயற்படுத்தாமல் நீடிப்பதில் பயனில்லை. ஊரடங்கின்போது அதிகமான வாகனங்களையும் மக்களையும் வீதிகளில் காண்கின்றோம்.

அத்தோடு இவ்வாறான ஊரடங்கால் பயனில்லை. மக்கள் சுதந்திரமாக வீதிகளுக்கு வரும் பலவீனமான ஊரடங்குடன் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. அத்தியாவசியத் தேவைகள் இன்றி வீதிகளில் நடமாடுவோருக்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *