பெரும் போகத்திற்காக சேதனப் பசளை தயாரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை!

எதிர்வரும் பெரும் போகத்திற்காக சேதனப் பசளை தயாரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 35 பொருத்தமான இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D. ரணவக்க தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் சேதனப் பசளை தயாரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இம்மாத இறுதியில் சேதனப் பசளையை விநியோகிக்க முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

பெரும்போகத்திற்காக 20,000 மெற்றிக் தொன் சேதனப் பசளை தயாரிக்கப்பட்டு வருகின்றது.இவற்றை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை உர நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D. ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *