உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாதென்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
” நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபர்களுக்கும் எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார். உள்ளாடை அதிகம் கையிருப்பில் உள்ளது. அதனால்மேலும் இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதோச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”
மேலும் ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.