முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

புத்தளம் – மதுரங்குளி,  முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சடலம் நேற்று (10) மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் ஆடைகள் இன்றி காணப்படுவதுடன்  சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *