
செப்டம்பர் 15 க்கு முன்னர் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால் உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை கடமைகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.