வவுனியாவில் இருவர் கொரோனாவிற்கு பலி

வவுனியாவில் நேற்று இருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர்.

குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.

மற்றைய நபருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிகள் பெறப்பட்டு சாதாரண விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். அவரது பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று பீடித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *