இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ்: டேனியல் ரிச்சியார்டோ முதலிடம்!

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெக்லரன் அணியின் டேனியல் ரிச்சியார்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

தன்படி, நடப்பு ஆண்டின் 14ஆவது சுற்றான இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று மோன்சா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.72 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெக்லரன் அணியின் டேனியல் ரிச்சியார்டோ, பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 21 நிமிடங்கள் 54.365 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 27 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 1.747 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெக்லரன் அணியின் லெண்டோ நோரிஸ், இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 18 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

4.921 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள பதினொன்று சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஏழு வெற்றிகளுடன் 226.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், நான்கு வெற்றிகளுடன் 221.5 இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், 141 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த பதினைந்தாவது சுற்றான ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; 26ஆம் திகதி, சோச்சி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *