ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன

கொரொனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, 76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக் – வி தடுப்பூசியும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியும் இந்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *