இலங்கையில் உச்சம் தொடும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் மேலும் 135 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இந்த மரணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 487, 677 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *