அறைக்குள் அடைத்து வைத்து பெண்ணை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

கொழும்பு பிலியந்தலையில் உள்ள விடுதி ஒன்றில் இரண்டு நாட்களாக ஒரு பெண்ணை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற கடமையில் இணைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் 119 அவசர இலக்கத்திற்கு அளித்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர் திருமணமாகாதவர். தாக்கப்பட்ட பெண் திருமணமானவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்ட பெண்ணுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

ஆது்துர்ட அப்பெண்ணை கழிப்பறைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லை என்றும், கடுமையான தாக்கப்பட்ட பெண்ணின் மூக்கு மற்றும் உடலின் ஏனைய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *