
”கோத்தா ஆட்சியை நம்பி தவறிழைத்து விட்டோம்” ஆனந்த தேரர் வருத்தம்!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசை, ஆட்சிக்குக் கொண்டு வந்தமையானது, இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோன்று ஆகி விட்டது என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுபீட்சத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்து வந்தாலும், அது தொடர்பில் மக்கள் மத்தியில் திருப்தி – மகிழ்ச்சி இல்லை. இந்த நாட்டுக்கு தேவ சாபம் ஏற்பட்டு விட்டதா என்று எமக்கு அழைப்பை ஏற்படுத்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் இந்த நாட்டுக்குச் சிறந்த தலைவர் கிடைத்து விட்டார் என்று மக்கள் கொண்டாடினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பலர் பதவி விலகுகின்றனர். மேலும் சிலர் வேடிக்கை பார்க்கின்றனர். மறுபுறத்தில் நாடு சீனாவின் கொலணியாக்கப்பட்டு வருகின்றது. ஆக சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதைபோலவே உள்ளது. – என்றார்