பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

<!–

பருப்பின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – Athavan News

பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *