ஆறுதல் வெற்றியை நோக்கி இலங்கை- இன்று தென்னாபிரிக்காவுடன் மோதல்!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு தசுன் சானகவும் தென்னாபிரிக்கா அணிக்கு கேசவ் மஹாராஜூம் தலைமை தாங்கவுள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தென்னாபிரிக்கா அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காகவும் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பிலும் களமிறங்கவுள்ளது.

எதுஎவ்வாறாயிலும் இப்போட்டி, இருநாட்டு இரசிகர்களையும் மகிழ்விக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *