வவுனியாவில் 69 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் கொரோனா தொற்று 69 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (13) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 69 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தூக்கில் தொங்கி மரணமடைந்தவர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தனர். மூவர் திடீர் சுகவீனம் காரணமாகவும், மற்றையவர் வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கி மரணமடைந்தார்.

இருவர் வவுனியா முதியவர் காப்பகம் இருவர் அவர்களது வீடுகளில் சுகவீனம் காரணமாக மரணமடைந்திருந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் மரணித்த எட்டு பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *