கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

கொழும்பு- நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட கைக்குண்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *