மலேசியாவில் கொவிட் தொற்றினால் 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக இதுவரை 22ஆயிரத்து ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் மலேசியாவில் இதுவரை 20இலட்சத்து 30ஆயிரத்து 935பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 19ஆயிரத்து 495பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 422பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 25ஆயிரத்து 590பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 280பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 83ஆயிரத்து 336பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *